இந்தியாவில் பல மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அசாம் மாநிலத்தில் அரசு ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் ஆசிரியர்கள் சல்வார் சூட், சேலை அல்லது பிற பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இயல்பான உடையில் வர வேண்டும். ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணியக்கூடாது. பெண் ஆசிரியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிய கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.