விஜய் மக்கள் இயக்கம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஒரு அணியும், எஸ்ஏசி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருவதால் தான் பிரச்னைகள் வெடித்து வருவதாகச் தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது பிரச்னை சுமுகமாக வந்ததாக மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறுகின்றனர். இதனையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முன்னெடுப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளதால் விரைவில் நடிகர் விஜய் தமது அரசியல் கட்சியை பதிவு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வந்தால் அதில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குவது உறுதி என தகவல் வெளியாகியுள்ளது.