
உத்தரபிரதேச மாநிலத்தின் சஹாரன்பூர் மாவட்டம் டத்தோலி ரங்காட் கிராமத்தில், வயதான விதவை பிரேமோ தேவியை இரு பெண்கள் பட்டப்பகலில் தெருவில் வைத்து , காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு உட்படுத்திய காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மூதாட்டியின் இரு கால்களையும் ஒரு பெண் பிடித்து தரையில் இழுத்துச் செல்ல, மற்றொரு பெண் மூதாட்டியின் இரு கைகளையும் பிடித்து கட்டுப்படுத்தும் வீடியோ, 33 வினாடிகள் நீளத்தில் உள்ளது. அந்த நேரத்தில் அருகிலிருந்தவர்கள் தலையிட்டு தடுப்பதற்கு முயற்சி செய்தாலும், தாக்குதல் செய்பவர்கள் மீது அது எந்தவிதமான தாக்கமும் ஏற்படுத்தவில்லை.
இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக, தேஹத் கோட்வாலி காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, “தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என சஹாரன்பூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் சமூக வலைதளமான X பக்கத்தில் உறுதி கூறியுள்ளனர். இருப்பினும், தாக்குதலுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
यूपी में विधवा महिला प्रेमो देवी के गांव के ही कुछ दबंगों ने बुरी तरह पीटा वीडियो वायरल !!
सहारनपुर में मारपीट का वीडियो हुआ वायरल
देहात कोतवाली क्षेत्र अंतर्गत गांव दतौली रॉगड़ की बताई जा रही घटना !!#ViralVideo #Soshalmidia @UPGovt @Uppolice @UPPViralCheck pic.twitter.com/AsFpbrI3NZ— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) July 5, 2025
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய பிறகு, பலர் அதில் காணப்படும் கொடூர காட்சியை கண்டித்து பதிவுகள் வெளியிட்டுள்ளனர். “வயோதிபர் ஒருவரை இப்படி தாக்குவது எளிதாக சகிக்க முடியாத கொடுமை” என பொதுமக்கள் கூறி வருகின்றனர். பெண்கள் மற்றும் மூதாட்டிகள் மீது நடைபெறும் வன்முறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அமைந்துள்ளது. மேலும், இத்தகைய செயலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.