ஆஸ்திரேலியா நாட்டில் சரிடா ஹோலன்ட் என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு 41 வயது ஆகிறது. இவர் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு ஆச்சரியமான தகவலை பகிர்ந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அதாவது 10 மாதத்தில் வெவ்வேறு பிரசவங்களில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளாராம்.

அதாவது இவருக்கு முதல் குழந்தை பிறந்த நிலையில் 2 மாதத்தில் மீண்டும் கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து 8 மாதத்தில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் சபிறந்தது. இதனால் 10 மாதங்களில் 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மேலும் அவருடைய குழந்தைகள் அனைவருக்கும் தற்போது 13 வயது ஆகும் நிலையில் குழந்தைகளுடன் தற்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இந்த ஆச்சரிய தகவலை பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.