ஈரோடு மாவட்டத்தில் கூலி வேலை பார்க்கும் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கிராமத்தில் வசிக்கும் 7 வயது சிறுமியை நோட்டமிட்டுள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த சுப்பிரமணி அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுப்பிரமணியை அதிரடியாக கைது செய்தனர்.