
நவி மும்பை நகரத்தில் உள்ள CBD பிரிவு 1 பகுதியில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாக்கடை வடிகாலில் சிக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. மழையால் பாம்பு சாக்கடைக்குள் விழுந்த நிலையில், அதன் உடல் பாதி உள்ளே இருந்து, வாய் மட்டும் வெளியே தெரிந்தது.
இந்த செய்தி தெரியவந்ததும், பாம்பை கண்டு பதட்டமடைந்த பொதுமக்கள், உடனடியாக புனர்வாசு அறக்கட்டளையின் பாம்பு மீட்புப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர்.
View this post on Instagram
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த பாம்பு பிடி வீரர்கள், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு பாம்பை வெளியே இழுத்தனர். முதல் முயற்சியில் பாம்பை உள்ளே இருந்து இழுக்க முயன்றபோதும் வெற்றி இல்லை. அதன் பிறகு பாம்பு மீட்கப்பட்டது.
View this post on Instagram
நன்கு பயிற்சி பெற்ற மீட்புக்குழுவினர் பாம்பை ஒரு சாக்கில் பாதுகாப்பாக வைத்து, கிரீன் வேலி பூங்கா காட்டில் விடுவித்தனர்.
இந்த வீடியோவை @sarpmitr_ashtvinayak_more என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பதிவேற்றியுள்ளது. தற்போது 17 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் பெற்றுள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“உங்களுக்கு பயமாக இல்லையா?”, “உண்மையிலேயே இது தைரியம் தேவைப்படுகிற வேலை” எனப் பலரும் புகழ்ந்துள்ளனர்.