சமூக வலைதளங்களில் தற்பொழுது ஒரு வினோதமான வாகனத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக ‘ஜுகாட்’ எனப்படும் உள்ளூர் கண்டுபிடிப்புகளில் இந்தியர்கள் கில்லாடிகள் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒரு பழைய அம்பாசிடர் காரின் பின்பகுதியை அப்படியே வெட்டி எடுத்து, அதை ஒரு மாட்டு வண்டியுடன் இணைத்துள்ளனர்.
மேலும் வண்டியின் முன்பக்கத்தில் கம்பீரமாக ஒரு காளை மாடு பூட்டப்பட்டிருக்க, அதன் பின்னால் மக்கள் சொகுசாக காரின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். பார்ப்பதற்கு பழைய காலத்து ராஜ வண்டிக்கும் நவீன காருக்கும் இடைப்பட்ட ஒரு விசித்திரமான கலவையாக இது காட்சியளிக்கிறது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கலவையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “பெட்ரோல் விலை உயர்வுக்கு இதுதான் சிறந்த தீர்வு” என்று சிலர் நகைச்சுவையாகக் கூறினாலும், இன்னும் சிலர் “இது என்ன மாதிரியான கண்டுபிடிப்பு?” என்று தலையில் அடித்துக் கொள்கின்றனர்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் இதுபோன்ற புதுமையான மற்றும் வேடிக்கையான மாற்றங்கள் அவ்வப்போது அரங்கேறுவது வழக்கம் என்றாலும், இந்த ‘அம்பாசிடர் மாட்டு வண்டி’ அதன் தனித்துவமான தோற்றத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொழில்நுட்பமும் பாரம்பரியமும் இவ்வளவு வினோதமாக இணையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
