கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை பகுதியில் 47 வயதுடைய நாடக நடிகர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் நாடக நடிகர் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நாடக நடிகரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் சிறுமியின் தந்தைக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.