
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் அவருடைய நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்தவகையில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் அவருடைய x பக்கத்தில் தன்னுடைய தந்தையோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராகுல்.
அந்த பதிவில் அப்பா உங்களுடைய கனவு என்னுடைய கனவு .உங்களுடைய ஆசை என்னுடைய பொறுப்பு .உங்களுடைய நினைவு இன்றும் என்றும் என்னுடைய இதயத்தில் இருக்கிறது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.