
ஒரு சிறுமியின் துணிச்சலும், விவேகமும் உலகையே வியக்க வைத்துள்ளது. இரண்டு வயது மகளும் அவரது தந்தையும் தூங்கிக் கொண்டிருந்தபோது, சிறுமி முதலில் எழுந்து, தனது தந்தையை எழுப்ப முயற்சிக்கிறார். ஆனால், தந்தை எந்த அசைவும் இல்லாமல் இருக்க, “அப்பா, அப்பா” என கதறி அழுதவாறு மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார்.
தந்தையிடமிருந்து எந்த பதிலும் வராததால் பதறிப்போன அந்த சிறுமி, அழுது கொண்டே இருக்காமல், உடனடியாக ஹாலுக்கு சென்று தந்தையின் குளுக்கோஸ் மாத்திரையை எடுத்து வந்து அவரது வாயில் போடுகிறார். இந்த சமயோசித செயல், தந்தையின் உயிரைக் காப்பாற்றியது. மாத்திரையை உட்கொண்ட சில நிமிடங்களில் தந்தை மயக்கத்திலிருந்து மீண்டு எழ, சிறுமி சொன்ன முதல் வார்த்தைகள், “வா, சாப்பிட போலாம், நேரம் ஆச்சு,” என்பதாக இருந்தது. இந்த உருக்கமான தருணம், வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் பதிவாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிசிடிவி காட்சிகளின்படி, சிறுமியின் தந்தை குறைந்த இரத்த சர்க்கரை அளவு (லோ பிளட் சுகர்) காரணமாக மயக்க நிலைக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், இரண்டு வயது சிறுமியின் விவேகமான செயல் அவரை மரணத்திலிருந்து காப்பாற்றியது.
View this post on Instagram
“>
இவ்வளவு சிறிய வயதில், தந்தையின் உடல்நிலை பற்றிய புரிதலும், சரியான நேரத்தில் குளுக்கோஸ் மாத்திரையை எடுத்து கொடுத்த துணிச்சலும், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவியதும், நெட்டிசன்கள் அந்த சிறுமியை “சிறு வயது ஹீரோ” என்று பாராட்டி வருகின்றனர்.