உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கல்கோட்டியாஸ் பல்கலைக்கழகத்தில், B பிளாக் வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்கள் இடையே கடும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் வீடியோவில், மாணவர்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. மாணவர்களின் இந்த செயல், அங்கிருந்த மற்ற மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்த சண்டையின் காரணம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் இதை “பரஸ்பர மனமுடைவு” காரணமாக ஏற்பட்ட மோதல் என கூறுகிறார்கள். வீடியோவில் மாணவர்கள் குழுவாக தாக்கும் காட்சிகள் வெளிவந்த நிலையில், இது தொடர்பாக பல தரப்பிலிருந்து கண்டனம் எழுந்துள்ளது. இதுவரை எந்த மாணவரும் போலீசில் புகார் அளிக்கவில்லை என டாங்கூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போலீசார் தொடர்ந்து சூழ்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

 

 

பல்கலைக்கழக நிர்வாகம் இந்த சம்பவத்தைக் கடுமையாக எடுத்துக்கொண்டு உள்நடப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்கிடையில், இது தனிப்பட்ட சம்பவமல்ல என்றும், இதற்கு முன்பும் மாணவிகள் இடையே வாட்ஸ்அப் குழுவை மையமாகக் கொண்டு சண்டை ஏற்பட்டதாகவும், அதன் வீடியோவும் பரவியது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல்கலை நிர்வாகம் விரைவில்  இது போன்ற பிரச்சனைகளை தடுப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை விரைவில் வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.