தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளுக்காக வேலை செய்த நிலையில் அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் பணியானது நடைபெற்றது.

இந்த பணியை கடந்த வருடம் ஜூலை 23 ஆகஸ்ட் 4 ஆகிய தேதிகளில் விடுமுறை தினங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் மேற்கொண்டதால் இந்த இரண்டு நாட்கள் பணிக்காலத்தை ஈடு செய்யும் விதமாக கடந்த ஜூன் 15-ம் தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் நாளை மறுநாள் விடுமுறை விட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.