கோவையில் ஓபிஎஸ் நேற்று பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். சூலூரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஓபிஎஸ், முதலமைச்சராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி என்னென்ன செய்தார் என்பது எல்லாம் எனக்கு நன்றாக தெரியும். நான் கையெழுத்து போட்டு தான் பைல்கள் அனைத்தும் போகும்.

நான் சில விஷயங்களை அவிழ்த்து விட்டால் நீ திகார் சிறைக்கு செல்ல வேண்டியது இருக்கும். சில விஷயங்கள் அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக விட்டுவிட்டேன் என்று ஓபிஎஸ் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.