மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளிலும், “INDIA” கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றது. இதனால் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவு முக்கியம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில்  மக்களவை சபாநாயகர் பதவியை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளும் பாஜகவுக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆட்சியை தக்க வைக்க ஆதரவு தரும் கட்சிக்கு துணை பிரதமர் பதவியை அளிக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.