மும்பையின் மலாட்டின் மலாவானி பகுதியில், 9வது மாடியில் இருந்து ஒரு பூனையை ஒருவர் வெறித்தனமாக கீழே வீசிய சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம், அந்தக் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

இது குறித்து வெளியான வீடியோவில், முதலில் ஜன்னலின் அருகே உள்ள ஷூ ரேக்கில் பூனை அமர்ந்திருந்தது. அப்போது கையில் பேக் போட்டிருந்த ஒருவர் அங்கு வந்தார். அவர் பூனையை பார்த்தவுடன் கோபம் கொண்டும், பின் திரும்பி வந்து பூனையை தூக்கி நேராக 9வது மாடியில் இருந்து கீழே வீசினார்.

இந்த கொடூர செயலைச் செய்தவர் கசம் சயீத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அதே  அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த ஒரு குடியிருப்பாளர் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பூனை இறந்த இடத்தில் ஒரு நபர் புகைப்படம் எடுத்து, குற்றவாளிக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது. இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

விலங்குகளின் மீதான வன்முறையை தடுக்கக்கோரி, பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.