மக்களுக்காக நான் பாடுபட்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், என்னுடைய இறுதிச்சடங்குக்கு வாருங்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். கலபுர்கியில் நடந்த கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய அவர், நீங்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கிறீர்களோ இல்லையோ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன். அதுவரை ஓயமாட்டேன் என்றார்.