மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் தாராபுரத்தில் இன்று (ஏப்ரல் 12) ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் திமுக அரசு மூன்று ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மறுபக்கம் அதிமுக என்ற கட்சித் தடுமாறி கொண்டிருக்கிறது. திமுக-வும், அதிமுக-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்” என்றார்.