மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. நவம்பர் 18-ஆம் தேதி அந்த பெண் பாங்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் இந்த கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் இருக்கும் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் மயங்கி விட்டார். அப்போது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அந்த நேரத்தில் மருத்துவமனையில் சுற்றி திரிந்த நாய் குழந்தையை கவ்வி சென்றது. ஆனால் மயக்கத்தில் இருந்த பெண்ணுக்கு அது தெரியவில்லை.

அந்த பெண் கழிவறைக்கு சென்ற நீண்ட நேரம் ஆனதால் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். அங்கு பெண் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறந்த குழந்தையை தேடி பார்த்தனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. இதனை அடுத்து மருத்துவமனை கேமராவை ஆய்வு செய்தபோது நாய் குழந்தையை கவ்வி சென்றது தெரிய வந்தது. அந்த பெண் மேல் சிகிச்சைக்காக பிஷ்ணுபூர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் முறையான பராமரித்து இல்லாதது தான் இதற்கு காரணம் என்ன பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் .