வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியாக களம் காண உள்ளது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படுமா என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அமைச்சராக கூறியதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதில் பாஜகவின் பங்கு இருக்கும்.

தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை நாங்கள் ஒன்றிணைக்க வில்லை. அது அவர்களது கட்சி பிரச்சனை. அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும் என கூறினார்.

மேலும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையில் போட்டியிடுகிறோம். அக்கட்சியில் இருந்து முதலமைச்சர் வருவார் என கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை அவர் குறிப்பிடாமல் பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, வருகிற 2026-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும். அதிமுக- பாஜக கூட்டணியில் கனவில் கூட பிரச்சனை வராது என கூறியுள்ளார். கூட்டணிக்கு விஜய் வருவாரா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் என கூறியுள்ளார்.