அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைத்தது தேமுதிக.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரக்கூடிய நேரத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய கட்சிகள் கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேமுதிகவை பொருத்தவரை அதிமுகவோடு தொடர்ந்து கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் தேமுதிக தற்போது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக 4 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது.

தேமுதிக கட்சியினுடைய பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எல்.கே.சுதீஷ் தலைமையில 4 பேர் கொண்ட குழு அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே சுதீஷ், அவைத் தலைவர் வி. இளங்கோவன், அழகாபுரம் ஆர். மோகன்ராஜ், ப. பார்த்தசாரதி ஆகியோர் தேமுதிக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.