திமுக முன்னாள் துணை பொதுச்செயலாளர் சற்குண பாண்டியனின் மருமகளும் ஆர்.கே தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன், இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்த இவர் அதிமுகவில் ஐக்கியமானது திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கடந்த சில நாட்களாக அவர் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.