
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரவியபுரம் பகுதியில் செல்வகுமார் (75) என்பவர் வசித்து வருகிறார். இவர் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும் தொழிலாளி. இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுக கட்சியின் தீவிர தொண்டராக இருந்து வருகிறார். இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 30 இடங்களில் வெற்றி பெறும் என செல்வகுமார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வைத்து பேசியுள்ளார்.
அப்போது அங்கிருந்த மற்றொருவர் திமுக தான் வெற்றி பெறும் அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்று கூறியுள்ளார். இதனால் அதிமுக தோல்வி அடைந்தால் தன்னுடைய ஒரு காலை வெட்டுகிறேன் என செல்வக்குமார் கூறியுள்ளார். தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. இதனால் செல்வகுமார் நேற்று முன்தினம் தன்னுடைய வலது காலில் கரண்டைக்கு கீழ் லேசாக அரிவாளால் வெட்டினார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.