திருநெல்வேலி மாவட்டம் கீழ பத்தை பகுதியில் இந்திரா காலனியைச் சேர்ந்த பாலனின் மகன் சந்துரு(12) 7- ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் நந்த பெருமாள்(12), நரேஷ்(12) வெற்றி மதன்(13) ஆகியோரும் படித்து வருகின்றனர்.

நேற்று பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சத்து குறைபாடு இருக்கு மாணவர்களுக்கு சத்து மாத்திரை கொடுக்கப்பட்டது. அந்த வகையில் சந்துரு, நரேஷ், நந்த பெருமாள் வெற்றி மதன் ஆகியோருக்கும் சத்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டது.

பள்ளி இடைவேளையின் போது நான்கு மாணவர்களும் யார் அதிக சத்த மாத்திரைகளை சாப்பிடுவது என விளையாட்டாக போட்டி நடத்தியுள்ளனர், ஒரே நேரத்தில் சந்துரு 15 மாத்திரைகள், நரேஷ் 3 மாத்திரைகள், நந்த பெருமாள் 7 மாத்திரைகள், வெற்றி மதன் 4 மாத்திரைகள் என அடுத்தடுத்து சாப்பிட்டனர்.

இதனை தொடர்ந்து பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சந்துருவும் நந்த பெருமாளும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மாணவர்களிடம் விசாரித்த போது போட்டி போட்டு சத்து மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.