
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய விதங்களில் பேசி வருகிறார். சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காமல் நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகுகிறார்கள். அப்படி விலகும் நிர்வாகிகள் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகி ஒருவர் சீமான் பற்றி விமர்சனம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் பின்னர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக அரசியலில் இருக்க வேண்டும் என்று எண்ணி திமுகவில் இணைந்ததாக கூறியுள்ளனர். இது பற்றி அந்த நிர்வாகி கூறியதாவது, சீமான் ஒரு பேச்சாளர். அவர் ஊர் ஊராக சென்று பேசிவிட்டு 500 ரூபாய் வாங்கிவிட்டு ஹோட்டலில் தூங்கி எழுந்து போகக்கூடிய ஆள். அவரைப் போய் திடீரென்று ஒரு தலைவராக்கி கார் வீடு பங்களா என்று கொடுத்தவுடன் அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
ஒருவேளை இவர் எம்எல்ஏ ஆகாமல் நமக்கு பின்னால் வந்த ஒருவர் எம்எல்ஏ ஆகிவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பதறுவார். சசிகலாவையே ஓரம் கட்டிய போது நம்மெல்லாம் எம்மாத்திரம் என்று நினைக்கக் கூடியவர் சீமான். இவர் பெரிய பயந்தாங்கோலி. ஆனால் வெளியில் அப்படி காட்டிக் கொள்ள மாட்டார். அவருடைய நிர்வாகம் டோட்டல் டேமேஜ். யாருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுப்பது யாரை கவுன்சிலராக நிறுத்துவது என்று அவருக்கு எதுவுமே தெரியவில்லை. ஒரு தொகுதி என்றால் ஒரு தொகுதி மட்டும் தானே. ஆனால் அவர் அதனை 38 தொகுதிகளாக பிரி என்கிறார். அவர் மனதளவில் அப்செட் ஆகிவிட்டார். நாங்கள் அண்ணன் மீது ரொம்ப பைத்தியமா இருந்தோம். ஆனால் கடைசியில் தான் தெரிந்தது அண்ணனே ஒரு பைத்தியம் என்று கூறினார். மேலும் இதோ அந்த வீடியோ,
View this post on Instagram