
கடலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞனூர் பகுதியில் அய்யாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் சப் ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த நபர்களில் சிலருக்கு சரியான வேலை கொடுக்காமல் ஏஜென்சியினர் ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் வெளிநாடு சென்றவர்களின் உறவினர்கள் அய்யாதுரைக்கு நெருக்கடி கொடுத்து தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு தொந்தரவு செய்தனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அய்யாதுரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது அண்ணன் மகனான இளையராஜா என்பவரது வீட்டிற்கு சென்றார். பின்பு அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யாதுரை உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.