ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் பகுதியில் பிச்சைக்காரர் ஒருவர் விலை உயர்ந்த செல்போனை வைத்துள்ளார். அந்த ஐ போனின் விலை 1.44 லட்சம் ரூபாய். இந்த iphone 16 ப்ரோ மேக்ஸ் செல்போன் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் விலை உயர்ந்த செல்போனை கையில் வைத்ததை பார்த்த ஒருவர் அவரிடம் இந்த செல்போன் எப்படி வந்தது என்று கேட்க அவர் பிச்சை எடுத்ததில் வாங்கியது என்று கூறுகிறார்.

அந்த மாற்றுத்திறனாளி பிச்சைக்காரர் ரொக்கமாக பணத்தை கொடுத்து போன் வாங்கியதாக கூறுகிறார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சிலர் இது போலியாக உருவாக்கப்பட்டிருக்களாம் என்று கூறுகிறார்கள். அதே சமயத்தில் பலரும் தங்கள் மனதில் தோன்றும் பலவித கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Rohit_informs (@rohit_informs)