நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பல பல முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். அந்தவகையில் அடுத்த 7 நாட்களுக்கு செல் ஃபோனில் ‘ஹலோ’ என்று சொல்லாமல் ‘தாமரை வணக்கம்’ என்று சொல்லுமாறு பாஜகவினருக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக கோவை பாஜக வேட்பாளரான அண்ணாமலை தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பாஜக தொண்டர்களுக்கு அவர் இந்த் வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.