வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுவை ஆகிய மாவட்டங்களில் கன மழை தொடரும் என்றும் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.