மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு என தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது.

தொடர்ந்து தேமுதிக, எஸ் டி பி ஐ மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியுடன் இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. பாமக பாஜக பக்கம் சென்றதால் 34 வன்னியர் சங்க கூட்டமைப்புகள் ஆதரவை பெற்ற அதிமுக தற்போது தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க ஆதரவையும் பெற்றுள்ளது. அதிமுகவுக்கு பெருகும் ஆதரவால் பாஜக தரப்பு கலக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.