உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கியில், ஒரு பெண் பையனாக வேடமணிந்து ஒரு டீனேஜ் பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுபேஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நிண்டூரி பகுதியில் வசிக்கும் அந்த டீனேஜ் பெண், கடந்த இரண்டு வருடமாக ஒருவருடன் தொலைபேசியில் காதலாகப் பேசிக்கொண்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை, அந்த “பையன்” திருமணம் பற்றி பேசும் நோக்கத்தில் அவரது வீட்டிற்கு வந்த போது, அவரது நடத்தை மற்றும் தோற்றத்தில் சந்தேகம் கொண்ட குடும்பத்தினர் விசாரித்ததில் உண்மை வெளிச்சத்துக்குவந்தது.

மோட்டார் சைக்கிளில் பையனாக வந்தவர், உண்மையில் ஷுகுல் பஜாரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் என்பதும், தனது தலைமுடியை வெட்டிக்கொண்டு ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்து, பையனாக நடித்து வந்ததும் தெரியவந்தது.

இவர், ஒரு போலி ஆணின் பெயரில் பேஸ்புக் கணக்கு உருவாக்கி, அந்த டீனேஜ் பெண்ணுடன் நட்பு வைத்திருந்தார். தொடர்ந்து தொலைபேசியில் உரையாடி, காதலை வளர்த்துள்ளார். அவர்களுக்கிடையே நேரில் சந்திக்கும் திட்டம் இருந்ததால், ஞாயிற்றுக்கிழமை நேரில் வந்தபோது தான் மறைமுகமாக நடந்த காதல் கதையின் உண்மை தெரியவந்தது.

சந்தேகமடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசாரை அணுகினர். சுபேஹா காவல் நிலையத்திலிருந்து போலீசார் இருவரையும் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் இருவரும் பெண்கள் என்பது உறுதியாகியதோடு, எந்தவிதக் குற்றச்சாட்டும் நிலவவில்லை என்பதாலும், புகார் அளிக்காமல் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் கிராமத்திலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்துக்கிடையாக்கியுள்ளது. “உண்மை காதலா? மோசடியா?” என்ற கேள்வியை மக்கள் எழுப்பும் அளவுக்கு இது சமூகத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.