
மத்தியப் பிரதேசம் ரத்லாம் மாவட்டம் பால்சோடா படா அருகே, வீதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு வெள்ளை குதிரை, ஒரு பெரிய யானையை கடித்தும், துரத்தியும், தாக்கியும் கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் பயந்தோடி சென்றதை வீடியோ தெளிவாக காட்டுகிறது.
हाथी और घोड़े का युद्ध भी देख लो 😄 pic.twitter.com/Amwbl5TkP5
— CRICKET LOVER 🙃 (@Cricket_lover2o) May 31, 2025
யானையின் மேல் ஒருவர் இருந்தபோதிலும், குதிரையை கட்டுப்படுத்த முடியவில்லை. குச்சி கொண்டு அடித்து கட்டுப்படுத்த முயற்சித்தும், குதிரை தொடர்ந்து தாக்கியதை காண முடிகிறது. யானை பெரும் உடல் அளவு மற்றும் சக்தி கொண்டது என்றாலும், தன்னை காப்பதற்காக யானை ஓடியது. தப்பிக்க முயன்ற யானையை, குதிரை வேகமாக துரத்தி சென்ற காட்சிகள், இந்த வீடியோவை அதிர்ச்சிகரமாக்கியுள்ளது.
தொடக்க தகவலின்படி, தாக்கிய குதிரை அருகிலுள்ள இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து தப்பித்து விட்டு யானையை நோக்கி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. தாக்குதலுக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை. பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை என்றாலும், மூன்றுவீல் மற்றும் இருசக்கர வாகனங்கள் கீழே விழுந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற விலங்குகள் இடையே நேரடி மோதல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.