
இந்தியாவின் பல பகுதிகளை வாட்டும் வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், டெல்லியைச் சேர்ந்த ஒரு நபர், வெயிலுக்கு இடையே தன்னைக் காத்துக்கொள்ள செய்த காரியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
View this post on Instagram
வீடியோவில் அந்த நபர் தனது கட்டிலைக் கிணற்றுக்குள் கயிறு மூலம் தொங்கவிட்டபடி அதில் ஓய்வெடுப்பது போல படுத்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோவில், அவர் தனது கட்டிலை ஒரு ஆழமான கிணற்றின் நடுவில் தொங்கவைத்து, கிணற்றில் உள்ள குளிர்ந்த காற்றினை அனுபவிக்கிற விதமாக அமைத்துள்ளார்.
இந்த அதிர்ச்சி தரும் காட்சி பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் அபாயகரமான முயற்சி என பலரும் கருதும் நிலையில், அவரது முகத்தில் எந்தவிதமான பதற்றமோ பயமோ இல்லை.
இந்த வீடியோவை humor_dukan என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்து, பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒருபக்கம் சிலர் அவருடைய புதுமையையும் துணிச்சலையும் பாராட்டுகிறார்கள்.
மறுபக்கம், இதனை மிக அபாயகரமான செயல் எனவும், ஒரு தவறான நிலை ஏற்பட்டால் நேராக உயிரிழப்புக்கும் வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.