பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது  ஒரு உள்ளூர் ரயிலில் பைக்குடன் பயணம் செய்யும் ஒரு இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக ரயிலில் சுழற்சி வண்டிகள், பைக்குகள் போன்ற வாகனங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. ஆனால் இந்த வீடியோவில், ரயிலுக்குள் பயணிகள் அமர்ந்திருந்தபோதும், ஒரு இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் மெதுவாக முன்னே செல்வது தெரிகிறது. இந்த வீடியோ பீகாரைச் சேர்ந்தது என கூறப்படுவதுடன், சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ krishna_kumar__620 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ‘பீகாரின் சக்தி’ என்ற தலைப்பும் இடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒருவர் பைக்கில் மெதுவாக செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது. அதனை சுற்றி நின்ற பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் அந்த இளைஞரோ பைக்கில் செல்கிறார்.

 

இது ரீல்ஸ்-காக எடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் நோக்கமா என்பது தெரிய வராத நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பொது இடங்களில் அதுவும் ஓடும் ரயிலில் இவ்வாறு செய்வது தவறு என்பதால் நெட்டிசன்கள் கடண்டன்களை பதிவு செய்து வருகின்றனர்.