ருமேனியாவைச் சேர்ந்த ஒருவர், தனது பைக்கை போக்குவரத்து அபராதத்திலிருந்து காப்பாற்ற ஒரு தந்திரத்தை பயன்படுத்தி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வீடியோவில், அந்த நபர் தனது பைக்கின் நம்பர் பிளேட் பகுதியில் ஒரு டிஜிட்டல் திரையை பொருத்தியிருப்பது தெரிகிறது.

இந்த திரையில், நம்பர் பிளேட் போலவே வெவ்வேறு பதிவு எண்கள் மாறி மாறி காட்டப்படுகின்றன. இதனால், சிசிடிவி காமிரா மற்றும் போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க முடிகிறது என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Urdu Poetry | اُردو شاعری (@poetry_lover00)

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @poetry_lover00 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் அவர் கேமராவை நெருக்கமாக நம்பர் பிளேட்டில் ஃபோகஸ் செய்ய, அந்த நம்பர் பிளேட் உண்மையில் டிஜிட்டல் ஸ்கிரீன் என்பது உறுதியானது.

இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். வீடியோ வைரலாகியதுடன், நெட்டிசன்களும் தங்கள் கருத்துக்களை நகைச்சுவையாக பதிவு செய்து வருகின்றனர்.

ஒருவர், “இந்தியாவுக்கு வந்துவிட்டால், இந்த டெக்னிக் 0.1 வினாடியில் திருடப்பட்டிருக்கும்” என சிரிப்புடன் குறிப்பிட்டுள்ளார். இன்னொருவர், “ஜேம்ஸ் பாண்டா மாதிரி சிந்தனை” என கமெண்ட் செய்துள்ளார்.

இருப்பினும், இந்த செயல் சட்டவிரோதமானது என்பதும், பிடிபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. விதிகளை மீறுவதற்குப் பதிலாக, அவற்றைப் பின்பற்றுவதே நமக்கும் சமூகத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும் என்பது இந்த சம்பவத்தின் முக்கிய பாடமாகும்.