சமூக வலைதளங்களில் தற்போதைய வைரல் வீடியோ ஒன்று நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆப்பிரிக்காவின் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோவில், ஒரு நபர் பயமின்றி கழுதைப்புலியின் முதுகில் அமர்ந்து சவாரி செய்கிறார்.

சிங்கங்கள் கூட பயப்படும் இந்த கொடூர விலங்கு, கூட்டமாக இருந்தால் காட்டின் ராஜா சிங்கத்தைக் கூட ஓட விடும் சக்தி உடையது. அத்தகைய விலங்கின் மீது ஒருவர் சவாரி செய்வது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Motawa Almotawa مطوع المطوع (@motawa_almotawa)

வீடியோவில், அந்த நபர் சவாரி செய்யும் காட்சியை கிராமவாசிகள் சிரித்தும், கேலியும் செய்தும் பார்க்கின்றனர். ஒருவர் குச்சியைக் காட்டி அந்த நபரை கிராமத்திலிருந்து வெளியே அனுப்ப முயற்சிக்கிறார். பின்னால் குழந்தைகள் கத்திக்கொண்டு ஓடுவதை காணலாம். இது ஒரு பக்கத்தில் ஆச்சரியமானதாகவும், மற்றொரு பக்கத்தில் சுவாரஸ்யமாகவும் உள்ளது.

இந்த வீடியோ Instagram-இல் @motawa_almotawa என்ற கணக்கில் பதிவிடப்பட்டு, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். “ஓ சகோதரரே! நீங்கள் கழுதைப்புலியை சவாரியாக்கிட்டீங்க!” என நெட்டிசன்கள் நகைச்சுவையாகக் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.