டெல்லி மற்றும் காஜியாபாத்தில் கிளைகளைக் கொண்ட சபையர் சர்வதேச பள்ளி, செயற்கை நுண்ணறிவை (AI) கல்வியில் புதுமையாக ஒருங்கிணைத்துக் கொண்டு ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இம்முயற்சியின் கீழ், வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு மாணவரும், தங்களது கனவு தொழில்களை – விண்வெளி வீரர்கள், மருத்தவர்கள், பொறியாளர்கள் என – AI மூலம் உருவாக்கப்பட்ட வாழ்க்கைசார் காட்சிகளில் நேரில் காணும் வாய்ப்பு பெற்றனர்.
மாணவர்கள் தங்களை அறுவை சிகிச்சை அறைகளில், விண்வெளி நிலையங்களில், ஆய்வகங்களில் பார்க்கும் அந்த தருணங்கள், வகுப்பறையில் ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்வுகளை ஏற்படுத்தின.
View this post on Instagram
இந்த முயற்சிக்காக பள்ளி பகிர்ந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி, ஆயிரக்கணக்கான பார்வைகள் மற்றும் பாராட்டுக்களைக் பெற்றுள்ளது. “21ஆம் நூற்றாண்டில் கற்றல் இப்படித்தான் இருக்க வேண்டும்,” என பலர் கருத்து தெரிவித்துள்ளார்.
Teachers use AI to turn students dream into reality. #AI #artificialintelligence #school #DREAMTHEFUTURE #technology (Sapphire intl school) #India #future #love #care pic.twitter.com/F6DcCnOsjx
— Sandesh (@sandeshbs1144) July 16, 2025
மேலும், இந்த முயற்சியில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் உற்சாகமாகக் கரைந்துவிழும் காட்சிகள் நெட்டிசன்களின் மனதை வெகுவாக ஈர்த்துள்ளன. இச்செயல்முறை, கல்வியில் AI எப்படி விழிப்புணர்வாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகவும், வெறும் பாடநூல் அறிவைத் தாண்டி மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கான முன்நோக்கியான பயிற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பம் நிறைந்த உலகத்திற்கு ஏற்றதுபோல, தனிப்பட்ட ஆர்வங்களை அடிப்படையாகக் கொண்டு தொழில்முறை காட்சிகளை உருவாக்கும் இந்த திட்டம், எதிர்கால தொழில்களுக்கான தகுதியும் நம்பிக்கையும் மாணவர்களிடம் வளர்க்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. AI மூலம் கற்றலை உயிரூட்டும் இந்த முயற்சி, இந்தியக் கல்வியில் ஒரு புதிய படியாக அமைந்துள்ளது.
