
சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் புதுப்புது சம்பவங்கள் வைரலாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் திருமண நிகழ்ச்சிகள் குறித்த வீடியோக்களும் வைரல் ஆகிறது. அதன்படி சமீபத்தில், புதுமணத் தம்பதிகளின் புகைப்பட நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட ஒரு விநோதமான நிகழ்வு இணையத்தில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. மணமகனும், மணமகளும் மேடையில் சோபாவில் அமர்ந்திருந்த போது, விருந்தினர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு இளைஞர் பரிசுடன் வந்தார். அவரின் வருகையின் பின்னர், மண்டப மேடையின் விளிம்பில் வைக்கப்பட்டிருந்த சோபா, மணமகளுடன் கீழே விழுந்தது.
இந்த வீடியோவில், மணமகள் சோபாவுடன் கீழே விழும் தருணம், கஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது நடந்தபோதும், மணமகன் மிகவும் இயல்பாகவே தனது இடத்தில் அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிகிறது. சோபா கீழே விழும் போது கூட, அவர் அசையாததுடன், அவரது முகபாவனைகளிலும் எந்த பதட்டமும் தெரியவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதம் கிளம்பியுள்ளது. “இந்த மனிதன் என்ன ஆனாலும் அசைய மாட்டாரா?”, “மணமகள் விழுந்தாலும் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருக்கிறார்?” என பலரும் கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் “நான் என் வேலையைச் செய்யும்போது – ஒரு ஊழல் நடக்கிறது!” என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றதுடன், பல்வேறு நகைச்சுவை விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
சிலர், “இவர் ஒரு சிவப்பு கொடி”, “இவர் மேடையையே கவனிக்கவில்லை, வாழ்க்கையையும் கவனிக்க மாட்டார் போல” என நையாண்டி விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோ, மணமகளுக்கு நேர்ந்த விபத்தைவிட, மணமகனின் நடத்தை காரணமாகவே அதிகமாக வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram