அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில், ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மேலும் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது, இந்த மாதத்தில் கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த 4வது துப்பாக்கிச் சூடு சம்பவம்.

கடந்த வாரம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சீன புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது மர்மநபர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அதேபோல் ஹாஃப்மூன் விரிகுடாவில் ஒருவர் 7 பேரை சுட்டுக் கொன்றார்.