கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிராவட்டம் கிராமத்தில் ராஜன்-பிந்து தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்த ஸ்ரேயா என்ற 18 வயது மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற நிலையில் கல்லூரியில் பட்டப்படிப்பு படிப்பில் சேர தயாராக இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரேயாவுக்கு பிறந்தநாள் வந்தது. அவர் அன்றைய தினம் காலை நேரத்தில் குளிப்பதற்காக பாத்ரூம் சென்ற நிலையில் திடீரென அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பிந்து உடனடியாக தன்னுடைய மகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்ரேயா இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதில் மாணவி இதய பிரச்சினை காரணமாக இறந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிறந்தநாள் அன்றே மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்தப் பகுதியே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.