
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோவிலுள்ள காந்திநகர் திராகா பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 40 வயதான சுஷீல் பாஜ்பாய் என்பவர் விலங்கினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று காலை, தனது மைத்துனர் ஷுபமுடன் (29) நடந்து சென்றபோது, சுஷீலை எதிர்பாராதவிதமாக ஒரு மாடு தாக்கியது. வேகமாக வந்து தாக்கிய காளை, அவரை சுமார் நான்கு அடி உயரம் தூக்கி வீசியது. விழுந்த பிறகும் அந்த மாடு அவரை மீண்டும் மீண்டும் தாக்கியது. மைத்துனர் ஷுபம் அவரை காப்பாற்ற முயன்ற போது, அவரும் காளையால் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
उन्नाव में सांड ने एक युवक की पटक पटक जान ले ली, हर दूसरे तीसरे दिन किसी न किसी की सांड हमले में जान जा रही है
योगी सरकार आने के बाद छुट्टा जानवरों का आतंक प्रदेश में फैल गया, बस इतना ही विकास इस सरकार में हुआ है pic.twitter.com/gIVYaq4k3J
— Surya Samajwadi (@surya_samajwadi) June 1, 2025
சுற்றியுள்ள பொதுமக்கள் முதலில் பயத்தில் தலையிட முடியாமல் தள்ளிப் போன நிலையில் பின்னர் இருவரும் உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், சுஷீல் பாஜ்பாய் சம்பவ இடத்திலேயே பலியானதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிகழ்வு அவரது குடும்பத்தை பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தெருக்களில் சுற்றி திரியும் இந்த மாடுகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.