குஜராத்த மாநிலம் சூரத்தில் 27 வயதான ஜவுளி தொழிலதிபர் ரிஷப் காந்தி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். ஐந்து நாட்களுக்கு முன்னர் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், இந்த துயரச் செய்தி அவரது குடும்பத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில், ரிஷப் தனது கடையில் ஊழியர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் குடிக்க பாட்டிலை எடுக்க முயன்ற நேரமே மாரடைப்பு ஏற்பட்டது.

இதை கவனித்த ஊழியர்கள் உடனடியாக ரிஷப்புக்கு சிஇபிஆர் அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சில நொடிகளில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

ரிஷப்பின் திடீர் மரணம் அவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய விரைவான மாரடைப்பால் உயிரிழப்பானது, இளம் வயதில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. குஜராத்தத்தில் கடந்த சில மாதங்களாக ஜிம், கர்பா, மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின் போது இளம் வயதினரிடம் மாரடைப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது மற்ற இளைஞர்களுக்கும் ஓர் எச்சரிக்கை ஆகும்.