உலக சிக்கன நாள் முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் பொது மக்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார். அதன்படி ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தை கடைபிடித்தால் எதிர்பாரா செலவீனங்களை சமாளித்திட இயலும். சேமிப்பின் அவசியத்தை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துரைத்து ஊக்குவிக்க வேண்டும். மக்கள் தங்கள் சேமிப்புகளை அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து பயனடைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிட வேண்டும் என முதல்வர் யோசனை கூறியுள்ளார்.