தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் ரசிகர்களால் தல அஜித் என்று அழைக்கப்படுகிறார். ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார். இவர் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் திரையுலகுக்கு வந்து தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.  தொடக்கத்தில்  இவரின் பல படங்கள் தோல்வி அடைந்தன. அதன் பிறகு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் அவர் நடித்த ஆசை படம் மெகா ஹிட் ஆனது.

அதன் பிறகு அவர் ஆசை நாயகன் என்று அழைக்கப்பட்டார். இவரின் 50 ஆவது படமான அமர்க்களம் படத்திலிருந்து தான் ஷாலினிக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அஜித் எங்களுக்கு மருமகன் இல்ல.. மகன்.. என்று ஷாலினியின் தந்தை ஏ.எஸ்.பாபு தெரிவித்தார். அஜித் குறித்து பேசிய அவர், அஜித்திடம் பிடித்ததே அவருடைய உபசரிப்புதான். வீட்டில் வேலை செய்பவர்களை கூட குடும்ப ஆட்களைப்போல மரியாதையோடுதான் நடத்துவார். இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறோம் என்று நினைக்கவே மாட்டார். மிகப்பெரிய ஹீரோ, எனக்கு மருமகனாக வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று தெரிவித்தார்.