
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, பாஜக அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக டிவியில் நானும் பார்த்தேன். அந்த இரண்டு கட்சிகள் சேர்ந்து எடுத்த முடிவு அது.
அதை பற்றி எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஏப்ரல் 30ஆம் தேதி தேமுதிக செயற்குழு பொதுக்குழு நடத்த உள்ளோம். அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தேமுதிகவின் வளர்ச்சி பணிகளில் மட்டுமே நாங்கள் முழுமூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் உள்ளது. இந்த முறை நாங்கள் யோசித்து நிதானமாக தான் முடிவு எடுப்போம்.
பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் தான் இருந்தோம். கூட்டணி குறித்து யாரிடமும் எதுவும் பேசவில்லை. அதை அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். அமைச்சர் பொன்முடியின் பேச்சு கேவலமானது.
அசிங்கமாக பார்க்கிறேன். பாஜக மாநில தலைவர் மாற்றம் என்பது அந்த கட்சியின் முடிவு. அதில் நாங்கள் கருத்து சொல்ல எதுவும் இல்லை. புதிய தலைவருக்கு தேமுதிக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.