திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் காலையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

ஆனால் போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாததால் தூய்மை பணியாளரே தனக்கு சிகிச்சை அளித்ததாக காலில் காயத்துடன் வந்தவர் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் இது போன்ற செயல் கண்டிக்கத்தக்கது என சமூக கண்டனம் தெரிவித்துள்ளனர்.