தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, வட சென்னை தண்டையார் பேட்டையிலுள்ள அகஸ்தியா தியேட்டரை விலைக்கு வாங்கி விட்டதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. இந்த தியேட்டர் 1967-ம் வருடம் திறக்கப்பட்டது. இதில் முதல் திரைப்படமாக பாமா விஜயம் திரையிடப்பட்டது. பழமைவாய்ந்த இந்த தியேட்டரை கடந்த 2020-ம் வருடத்தில் மூடிவிட்டனர்.

இந்நிலையில் அகஸ்தியா தியேட்டரை நயன்தாரா விலைக்கு வாங்கி உள்ளதாகவும், அதனை இடித்துவிட்டு மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் கட்டப்போவதாகவும் சமூகவலைத்தளத்தில் தகவல் வெளியாகியது. எனினும் இது உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது. அகஸ்தியா தியேட்டரை வாங்கியதாக பரவிய தகவலை நயன்தாராவும், கணவர் விக்னேஷ் சிவனும் மறுத்திருப்பதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.