அகமதாபாத்தில் நடந்த பயங்கர விமான விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது , அகமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து போயிங் 787 சீரிஸ் விமானங்களை விரிவான கண்காணிப்புக்கு உட்படுத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் மொத்தமாக 787 சீரிஸ் விமானங்கள் 34 உள்ளது. அனைத்து விமானங்களும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். கருப்பு பெட்டியில் உள்ள தகவல்கள் மூலம் விமான விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும். விபத்துக்கான காரணத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

விமான விபத்து தொடர்பான உயர்மட்டக் குழுவின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. போயிங் 787 ரக விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.