அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 போட்டியில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் ஆட்டமிழந்த விதம் குறித்து அதிருப்தி அடைந்த விராட் கோலி, மைதானத்தின் வெளியே இருந்த நான்காவது அம்பயருடன் ஆக்ரோஷமாக விவாதித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. ஜேசன் ஹோல்டர் பிடித்த அந்த லோ-கேட்ச், தரையில் பட்டு எடுக்கப்பட்டதாக ஆர்சிபி தரப்பில் புகார் எழுப்பப்பட்டது.
It’s heating up in Ahmedabad! 🔥#JasonHolder caught #RajatPatidar at the boundary, but the #RCB camp wasn’t convinced with the decision! 👀#TATAIPL 2026 ➡️ #GTvRCB | LIVE NOW 👉https://t.co/K8vuSzrZ1d pic.twitter.com/GwfAoIelDj
— Star Sports (@StarSportsIndia) April 30, 2026
டிவி ரிப்ளேயில் பந்து தரையில் பட்டது போலத் தெரிந்தாலும், மூன்றாவது நடுவர் அவுட் என்று தீர்ப்பளித்தார். இதனால் கடும் கோபமடைந்த விராட் கோலி, பவுண்டரி எல்லைக்கோடு அருகே இருந்த அம்பயரிடம் சென்று நீண்ட நேரம் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கப் போராடி வரும் நிலையில், இந்த சர்ச்சைக்குரிய விக்கெட் போட்டியின் போக்கையே மாற்றியது. இந்த மோதல் ஐபிஎல் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
