
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நான்டெட் பகுதியில் சலீம் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ரேஷ்மா என்ற மனைவி இருக்கும் நிலையில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் ஒருவருக்கு மனநலம் சரியில்லாத நிலையில் மற்றொருவர் ஹைதராபாத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகை என்பதால் தம்பதியினர் ஹைதராபாத்தில் உள்ள தங்களுடைய மகளின் வீட்டிற்கு சென்றனர். கடந்த வெள்ளிக்கிழமை சலீம் வீட்டிற்கு வந்த நிலையில் தன்னுடைய மனைவியை காய்கறி வெட்டும் கத்தியை காட்டி கொலை செய்வதாக மிரட்டினார்.
இதனால் அவர் கத்திக்கொண்டே வெளியே ஓடிய நிலையில் ஜூபே தா என்ற 26 வயது பெண் அவர்களின் சண்டையை தடுத்து நிறுத்தினார். அப்போது சலீம் தன்னுடைய மனைவி என நினைத்து தவறுதலாக அந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டார்.
அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சலிமை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.