மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நைகயானால் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் உள்ள ஒரு பொது கழிவறையில் முதியவர் ஒருவர் ஒரு பெண் நாயை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த முதியவர் நாயுடன் உடலுறவு கொண்ட நிலையில் இதனை பார்த்த ஒரு பெண் கையும் களவுமாக பிடித்துவிட்டார்.

அந்த முதியவரிடம் அந்த பெண் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கோபமாக கேட்ட நிலையில் அவர் எதுவும் செல்லாமல் அங்கிருந்து கிளம்பிய நிலையில் கழிவறையில் இருந்து நாய் வெளியே வந்தது. அதாவது இதை பார்த்த சிலர் விலங்கு நல ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் உடனடியாக ஒரு பெண் அந்த இடத்திற்கு வந்து அந்த முதியவரை கையும் களவுமாக பிடித்தார். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.